ராசிமணலில் அணைகட்ட வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
ராசிமணலில் அணைகட்ட வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை கட்ட காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அணை கட்ட யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நாளை ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத்திற்கு சின்னசாமி தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடங்கி வைக்கிறார். நாளை மாலையில் இந்த உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் முடித்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com