விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய-மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்:

மத்திய-மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோக திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஏழை, விவசாய தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சாந்தி, கமலா தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, விவசாய சங்கம் செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்கம் அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்தியமைப்பு பொது செயலாளர் ராஜேந்திரன் விளக்க உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 1982-ம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com