வடலூரில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

வடலூரில் குடும்ப பிரச்சனையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடலூரில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வடலூர்:

வடலூர் ரோட்டு ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 41). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி(31). குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் லட்சுமி கோபம் அடைந்து சீர்காழி அருகே திருவையாறில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கோதண்டராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com