திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தம்பதி மீது கொலை வெறி தாக்குதல்

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தம்பதியை தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தம்பதி மீது கொலை வெறி தாக்குதல்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் பால்ராஜ் (வயது 22). இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கும் அவரது உறவினர் மகேந்திரன், சக்தி, தெத்தன் ஆகியோருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

சம்பவத்தன்று பால்ராஜ், ஈஸ்வரி மற்றும் பால்ராஜின் சகோதரர் தங்கராஜ் ஆகியோர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மகேந்திரன், சக்தி, தெத்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளை கொண்டு அவர்களை இடித்தனர்.

தவறி கீழே விழுந்த அவர்களை கம்பால் தாக்கினர். மேலும் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டிவீரன் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com