மத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் நியமனம்

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் மத்திய விழிப்புணர்வு ஆணையராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #ExNIAchief #SharadKumar #CVCcommissioner
மத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் நியமனம்
Published on

புதுடெல்லி:

ஊழல் தடுப்பு பிரிவின் பரிந்துரையின் உருவாக்கப்பட்ட மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கு தேசிய அளவில் மத்திய விழிப்புணர்வு ஆணையராக ஒருவரும், மேலும் இரு ஆணையர்களும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய விழிப்புணர்வு ஆணையர் பதவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் அந்த இடத்தில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி,எஸ். அதிகாரியான சரத்குமார் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவராக சுமார் நான்காண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது 62 வயதாகும் இவர் வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய விழிப்புணர்வு ஆணையராக நீடிப்பார். #ExNIAchief  #SharadKumar  #CVCcommissioner

X

Maalai Malar
www.maalaimalar.com