ஆறுகள் மாசுபடுவதை தடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம்- ஈஸ்வரன்

கொங்கு நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் மாசுபடுவதை அரசு தடை செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று ஈஸ்வரன் கூறினார்.
ஆறுகள் மாசுபடுவதை தடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம்- ஈஸ்வரன்
Published on

மேட்டுப்பாளையம்:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு அழைத்து பேசாதது தவறு. மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்க போகிறது என்று தெரிந்தும் அதனை உளவுத்துறை குறைத்து மதிப்பிட்டதும் தவறு.

ஸ்டெர்லைட் ஆலை போல் 100 மடங்கு கொங்கு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் மாசுபடுவதை அரசு தடை செய்யாவிட்டால் ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் 100 மடங்கு போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com