ஈரோட்டில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும் -குழியுமான சாலை
குண்டும் -குழியுமான சாலை
Published on

ஈரோடு:

ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் சத்திரோடு, பவானி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காணமுடிகிறது. எனவே குண்டும் -குழியுமாக காணப்படும் ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் எல்லை மாரியம்மன் கோவில் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com