ஈரோடு அருகே பணியின் போது மயங்கி விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி

ஈரோடு அருகே பணியின் போது மயங்கி விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே பணியின் போது மயங்கி விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி
Published on

ஈரோடு:

ஊட்டி அடுத்த கடப்பாடியை சேர்ந்தவர் யோக பிரியா (வயது 43). இவருக்கு திருமணமாகி கடந்த 10 வருடத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.

ஈரோடு நேதாஜி நகர் மாணிக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com