ஈரோடு மாநகராட்சி பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று ஆணையர் கூறியுள்ளார்.
குடிநீர்
குடிநீர்
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2,3 மற்றும் 4-க்குட்பட்ட சென்னிமலை ரோடு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, காந்திஜீ ரோடு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, காதர்பாட்ஷா குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகிய மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஊராட்சி கோட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் தனிக் குடிநீர் திட்டப்பணிகளுக்கான பிரதான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை (8-ந் தேதி) மற்றும் 9-ந் தேதி என 2 நாட்கள் வார்டு எண்கள் 28,29,41,44,53,54,56,57 ஆகிய பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது. எனவே பொதுமக்கள் இதை ஏற்றுக் கொண்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com