ஈரோடு சூளை பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி

ஈரோடு சூளை பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றார்கள்.
ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி
ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி
Published on

ஈரோடு:

ஈரோடு சூளை பகுதி எல்.வி.ஆர். காலனியில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போக்கு குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பைகளின் தூர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றார்கள்.

மேலும் காற்றில் இந்த குப்பைகள் பறந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களின் முகத்திலும் குப்பைகளின் கழிவுகள் பறக்கிறது. புழுதி மணலும் விழுந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஈரோடு மாநகராட்சியை கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com