எண்ணூரில் 60 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின.
எண்ணூரில் 60 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
Published on

திருவொற்றியூர்:

எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆந்திராவை சேர்ந்த ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.

இன்று காலை பூட்டி இருந்த ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 60 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பணம், நகை அனைத்தும் நாசமானது. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தீவிபத்து பற்றி அறிந்ததும் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுககு ஆறுதல் கூறினர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com