

கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ரன்குவிக்கும் நோக்கத்தோடு களம் இறங்கினர். அவர்கள் நினைப்பை அடியோடு குழிதோண்டி புதைத்தனர் அயர்லாந்து பந்து வீச்சாளர்கள்.
ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராய் 5 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
டென்லி 23 ரன்களும், சாம் குர்ரான் 18 ரன்களும், ஸ்டோன் 19 ரன்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 23.4 ஓவரிலேயே 85 ரன்னில் சுருண்டது. மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைக் கடந்தனர்.