நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.