மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவி கடத்தல் - காதலனுக்கு வலைவீச்சு

மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவியை கடத்தியதாக காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவி கடத்தல் - காதலனுக்கு வலைவீச்சு
Published on

மதுரை:

மதுரை அருகே உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவரது மகள் கிருத்திகா (30). என்ஜினீயரிங் மாணவியான கிருத்திகா. கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் கிருத்திகாவை அவரது காதலன் நவீன்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் செந்தமிழ்செல்வன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி கிருத்திகா மற்றும் நவீன்குமாரை தேடி வருகிறார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com