பனிப்போர் முடிவுக்கு வருகிறதா? - பேச்சுவார்த்தை வெற்றி என டிரம்ப், புதின் கூட்டாக பேட்டி

அமெரிக்கா - ரஷியா இடையே இன்று நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் இருந்ததாகவும் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். #TrumpPutinSummit #Helsinki2018
பனிப்போர் முடிவுக்கு வருகிறதா? - பேச்சுவார்த்தை வெற்றி என டிரம்ப், புதின் கூட்டாக பேட்டி
Published on

ஹெல்சின்கி:

அமெரிக்கா - ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் நேரடியாக இதுவரை மோதிக்கொள்ளவில்லை என்றாலும் பல்வேறு விவகாரங்களில் இரண்டு நாடுகளும் மறைமுக யுத்தம் நடத்தி வருகின்றன. சிரியா, உக்ரைன் விவகாரங்கள் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

இந்நிலையில், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். விரிவாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. 

அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு, சிரியா உள்ளிட்ட விவகாரங்களும் இடம் பிடித்தன.

இரு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் டிரம்ப் - புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதின் பேசுகையில், “பனிப்போர் நிலவிய காலத்துக்கு பின் நடந்துள்ள இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இருவரும் கருதுகிறோம். இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் சர்வதேச பாதுகாப்பை கவனிப்பது பொறுப்பாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு எந்த விதத்திலும் இல்லை” என புதின் கூறினார்.

டிரம்ப் பேசுகையில், “நடந்து முடிந்துள்ள இந்த சந்திப்பு வெளிப்படையாகவும், ஆழமானதாகவும், நேரடியானதாகவும் இருந்தது. இந்த நான்குமணி நேர சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் என முழுமையாக நம்புகிறேன்” என கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com