நெல்லிகுப்பம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

நெல்லிகுப்பம் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த தொழிலாளி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நெல்லிகுப்பம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

நெல்லிகுப்பம்:

நெல்லிகுப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45) தொழிலாளி.

இவர் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அதே பகுதியில் இருக்கும் தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார். அங்கு மின்சார கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காத ஏகாம்பரம் எதிர்பாராதவிதமாக அதை மிதித்து விட்டார். மின்சாரம் தாக்கி அவர் தூக்கிவீசப்பட்டார். இதில் ஏகாம்பரம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த நெல்லிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏகாம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com