சிறுசேரி, பனையூர் பகுதிகளில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு - மின்வாரியம் தகவல்

சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறுசேரி, பனையூர் பகுதிகளில் 17 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு - மின்வாரியம் தகவல்
Published on

சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சென்னை கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள், மின் பகிர்மான வட்ட அதிகாரிகளுடன் இணைந்து சென்னை தெற்கு-2 மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முறைகேடாக மின் இணைப்பு பயன்படுத்தியதற்காக ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 767 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க விதி முறைகளின் படி, அவர்களே முன்வந்து அதற்குரிய சமரச தொகையான ரூ.76 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com