திண்டுக்கல்லில் ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

குள்ளனம்பட்டி:

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் மேற்பார்வையாளர், பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் திருமலைச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திட்ட செயலாளர் உமாபதி, திட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், சி.ஐ.டி.யூ. துணைச் செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் தனசாமி, ஜெயசிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com