மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் பலி

தா.பழூர் அருகே மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). எலக்ட்ரீசியரான இவர் தா.பழூரில் உள்ள மின்சார வாரியத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று கொளஞ்சிநாதன் தா.பழூர் அருகே உள்ள மேலமெக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த கொளஞ்சிநாதன் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளஞ்சிநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி குமாரி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com