லாலாப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

லாலாப்பேட்டை அருகே ஆட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாலாப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

லாலாபேட்டை:

லாலாபேட்டை அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் கண்ணன்(வயது 33) , விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் ஆடுகளை மேய்க்க செங்கமேடு என்ற பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் வேகமாக ஓடி அங்கு கீழே கிடந்த மின் கம்பியில் சிக்கி துடித்து கொண்டிருந்தது. அதை பிடிக்க சென்ற கண்ணன் மின் கம்பியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து கிருஸ்ணராயபுரம் தாசில்தார் சுரேஸ்குமார், குளித்தலை டி.எஸ்.பி. முத்துகருப்பன், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணனுக்கு சுதா என்ற மனைவியும் கார்த்திகா(12) பிரசன்னா(8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com