தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
Published on

ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019

X

Maalai Malar
www.maalaimalar.com