

ஆலந்தூர்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சதாசிவ் (வயது76). உடல்நலம் சரியில்லாத இவர் கடந்த 4-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்த அவர் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது. விமானநிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.