எகிப்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - போலீசார் அதிரடி

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #Egyptpolice
எகிப்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - போலீசார் அதிரடி
Published on

கெய்ரோ:

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

இதுதொடர்பாக, போலீசார்  கூறுகையில், எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் இன்று போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர். #Egyptpolice 

X

Maalai Malar
www.maalaimalar.com