நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண 18 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டம்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 10 முதல் 14-ந்தேதி வரை எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியை காண தினந்தோறும் 18 ஆயிரம் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 70 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 16 வயது நிரம்பியவர்களாகவும், போட்டியை பார்க்க வருவதற்கு 24 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com