ஈத்தாமொழி சந்திப்பில் இன்று திமுகவினர் திடீர் சாலை மறியல்

சம்பக்குளம்-அத்திகடை சானலில் தண்ணீர் விட கோரி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். #austinmla
ஈத்தாமொழி சந்திப்பில் இன்று திமுகவினர் திடீர் சாலை மறியல்
Published on

ராஜாக்கமங்கலம்:

சம்பக்குளம்- அத்திகடை சானலில் தண்ணீர் விட வேண்டும் என கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈத்தாமொழி சந்திப்பில் இன்று காலை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், ரத்தினசாமி, பகர்தீன், காங்கிரஸ் வட்டார தலைவர் அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் வக்கீல் சரவணன், ராஜேந்திரன், குமார் சேரலாதன், கண்ணன், பாலகிருஷ்ணன், சிவகுருலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ.வுடன் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டம் பற்றி ஆஸ்டின் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சம்பக்குளம்- அத்திகடை சானலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இங்கு உப்பு நீர் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கால்வாய் சரியாக தூர்வாரப்படவில்லை. தற்போது குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இங்கு எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இதனால் வாழை, தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க இக்கால்வாயை முறையாக தூர்வாரி தண்ணீர் திறந்து விடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #austinmla

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com