காஷ்மீரை தொடர்ந்து மேகாலயாவிலும் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் மேகாலயாவிலும் தற்போது ரிக்டர் அளவில் 4.7 அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரை தொடர்ந்து மேகாலயாவிலும் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
Published on

ஷில்லாங்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4:28 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவும் இதே பகுதியில் 4.4 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 என பதிவாகியுள்ளதாக இந்திய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com