கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு

சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி வணிக சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு
Published on

சென்னை:

சென்னை கோயம்பேடு நகரில் அமைந்துள்ள காய்கறி, பழங்கள் வணிக சந்தையானது ஆசியாவிலேயே பெரிய வணிக சந்தையாகும். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

சந்தையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் தங்களது மாத ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com