வேறு நபருடன் இருந்ததால் ஆத்திரம் - முன்னாள் காதலி முகத்தில் பிஸ்கட் வீசிய நபர் கைது

அமெரிக்காவில் தனது முன்னாள் காதலி வேறு நபருடன் இருந்ததால் ஆத்திரமடைந்து அவர் முகத்தில் பிஸ்கட் வீசி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வேறு நபருடன் இருந்ததால் ஆத்திரம் - முன்னாள் காதலி முகத்தில் பிஸ்கட் வீசிய நபர் கைது
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் உள்ள கிழக்கு நாஸ்வெய்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரே தோமெர்லின். சாலையில் நடந்து செல்லும் போது தனது முன்னாள் காதலி வேறொரு நபருடன் காரில் செல்வதை பார்த்து ஆத்திரம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து தன் கையில் இருந்து பிஸ்கட் பாக்கெட் கொண்டு காதலியின் முகத்தில் எறிந்து தனது ஆத்திரத்தினை தீர்த்துக் கொண்டுள்ளார். மேலும் காரில் இருந்தபடியே தனது முன்னாள் காதலியையும், அவருடன் இருந்து புதிய நபரையும் ஜெப்ரே திட்டி தீர்த்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது சம்பவயிடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜெப்ரேவை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் ஒழுக்ககேடாக செயல்பட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com