

ராயபுரம்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.
இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.