திருச்சியில் நள்ளிரவில் அரசு பஸ்சை மறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்- 5 பேர் கைது

திருச்சியில் நேற்று இரவு அரசு பஸ்சை மறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் நள்ளிரவில் அரசு பஸ்சை மறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்- 5 பேர் கைது
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே தாளக்குடியை சேர்ந்தவர் ஜெகன்மோகன் (வயது 40). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வருபவர் பழனியப்பன். இவர்கள் இருவரும் நேற்று இரவு 11.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்யாணி கவரிங் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அவ்வழியாக சென்ற மற்றொரு பைக், பஸ்ஸில் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டுனர் பஸ்சை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த வாலிபர் காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்த பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

இது குறித்து பஸ் டிரைவர் ஜெகன் மோகன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோதலில் ஈடுபட்ட மதுரை ரோடு கல்யாண சுந்தர புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கவியரசர் என்ற பழனிசாமி (25), அவரது நண்பர்கள் மணிகண்டன் (20), சரவணன் (26), சதீஷ்குமார் (29) மற்றும் ரவிக்குமார் (25) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் அனைவரும் காந்தி மார்க்கெட் வெங் காயமண்டியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com