சங்கரன்கோவில் அருகே டிரைவர் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில் அருகே டிரைவர் தற்கொலை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மகன் சகாயராஜ் (வயது 46). டிரைவரான இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2-வதாக திருமணம் செய்து குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சகாயராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com