அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட டிரம்பின் மூத்த மகன்

அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் ஜூனியர்
டொனால்டு டிரம்ப் ஜூனியர்
Published on

அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது யார் என்பதில் ஜோ பைடன், டிரம்ப் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை வென்றெடுத்தால்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் ஜோ பைடன் அல்லது டொனால்டு டிரம்ப் அமர முடியும்.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்தது. அவர் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னேறினார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து, டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் உலக வரைபடத்தை வெளியிட்டு, அதில் எந்தெந்த நாடுகளில், ஆதரவு உள்ளது என்பதை குறிக்கும் வகையில் டிரம்பின் குடியரசு கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஜோ பிடனுக்கு ஆதரவான நாடுகளில் அந்தக் கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com