வடமதுரை அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி

வடமதுரை அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் பறிதாபமாக இறந்தது.
வடமதுரை அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி
Published on

வடமதுரை:

வடமதுரையை அடுத்த பாறைப்பட்டிக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று வந்தது. அந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்தி கடித்தன. இதில் காயம் அடைந்த அந்த புள்ளிமான் மிரண்டு ஓடி அந்த பகுதியில் உள்ள தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த புள்ளிமானை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் படுகாயம் அடைந்ததால் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பின்னர் இறந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றினர். அது, சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் என்றும், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் மானின் உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com