

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று காலை பணிக்கு திரும்பிய அரசு டாக்டர்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.