சொத்துவரி உயர்வை கண்டித்து கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #DMK
சொத்துவரி உயர்வை கண்டித்து கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

கோவை:

சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், மெட்டல் மணி, குமரேசன், குப்புசாமி,உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, பகுதி பொறுப்பாளர்கள் மார்க்கெட் மனோகரன், சேதுராமன், கோவிந்தராஜ், மற்றும் மகளிர் அணி மீனா லோகு, நிர்வாகிகள் முருகவேல், கார்த்திக் செல்வராஜ், மகுடபதி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர்கள் திருமலை ராஜா, கேபிள் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி, தினேஷ், டாக்டர் கணேஷ், கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சொத்துவரி உயர்வுக்கு எதிராககோ‌ஷம் எழுப்பபட்டது. முன்னதாக கார்த்திக் எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறியதாவது-

தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் படி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சொத்துவரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தாலும் கூட வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லைஎன்றால் மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்றார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் செயலாளர் மேங்கோ பழனிசாமி, இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், வெங்கடேஷ் உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். #DMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com