அனைத்துக் கட்சி சார்பில் 25-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு - ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் மே 25-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring #Stalin
அனைத்துக் கட்சி சார்பில் 25-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு - ஸ்டாலின்
Published on

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே, இன்றும் தூத்துக்குடியில் சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் மே 25-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் மே 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தை வணிகர்களும், இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring #Stalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com