ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக தேர்தல் பணி செயலாளர் குத்தாலம் கல்யாணம் கழக தீர்மானக் குழு இணை செயலாளர் தேனி ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு, மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ஏ.கே.சித்தி, மாவட்ட பொருளாளர் வள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானதிரவியம், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜோசப் பெல்சி, பேரூர் கழக செயலாளர்கள் டிம்பர் செல்வராஜ்,

மு.க.மாணிக்கம், ஜெயக்குமார், ஆனந்த், சுரேஷ், அசோக்குமார், வி.மூர்த்தி, குமார், தனபால், ஜி.பி.ராஜா, சுப்பையா, விஜயன், செந்தில்குமார், முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், ரமேஷ், பணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ராதாபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தர பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தோழர்கள் என 1500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com