தே.மு.தி.க. பிரமுகர் கடையில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன் கொள்ளை

கொடுங்கையூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கடையில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன், ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery
தே.மு.தி.க. பிரமுகர் கடையில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன் கொள்ளை
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அருள் பாக்யராஜ். தே.மு.தி.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

இவர் கொடுங்கையூர் அருகே மூலக்கடை, காந்தி நகர், காமராஜ் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக செல்போன் கடை திறந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது 2 ‌ஷட்டர்களின் பூட்டு உடைந்து திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட அனைத்தையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தனர். மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சமும் சுருட்டப்பட்டு இருந்தது.

கொள்ளை போன செல்போன்களின் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும். இது குறித்து கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாதி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். #Robbery

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com