ஸ்டெர்லைட் விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தமிழக மக்களை வஞ்சிக்கிறது - திவாகரன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும் என்று திவாகரன் கூறியுள்ளார். #SterlitePlant #NGT
ஸ்டெர்லைட் விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தமிழக மக்களை வஞ்சிக்கிறது - திவாகரன்
Published on

மன்னார்குடி:

அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர், திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி, போது நடந்த கலவரத்தில், பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசு, அந்த ஆலையை மூட உத்தரவிட்டது,

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பசுமை தீர்ப்பாயம், வழங்கிய, தீர்ப்பு தமிழக மக்களை, குறிப்பாக, தூத்துக்குடி மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும், இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை நடத்த வேண்டும்,

தமிழகத்தில் விவசாயத்தை கேள்விக் குறியாக்கும் வகையில், சமீபத்தில், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைகட்ட வரைவு திட்டத்திற்கு, அனுமதியளித்துள்ளது. இதை பார்க்கும் போது, ஏதோ சொல்லி வைத்த மாதிரி தமிழகத்தை வஞ்சிப்பதை போல மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது

நமது அரசியல் இயக்கங்கள், இது போன்ற பொதுப் பிரச்சினைகளில், ஒன்றிணைந்து, போராட வேண்டியது, அவசியமாகும், அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது, நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்க போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின், அரசியல் அணுகு முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகும்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதுடன், அனைத்து துறைகளிலிலும், அரசியல் தலையீடு, மத இன பிரச்சினையை தூண்டி, நாட்டில் அமைதியின் மையை ஏற்படுத்திய, மக்கள் விரோத நடவடிக்கைகளால், பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை கொடுத்திருப்பதாகவே, கருதுகிறேன்.

தமிழக முதல்- அமைச்சர் முறையில் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினும், ஸ்டெர்லைட், மேகதாது அணை, போன்ற பிரச்சினைகளில், மக்களை காப்பாற்ற பொறுப்புடன், குரல் கொடுக்கவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்.

தினகரனின், செயல்பாடுகள் பிடிக்காமல் தான் செந்தில்பாலாஜி, தி.மு.க.விற்கு சென்றிருக்கிறார். #SterlitePlant #NGT

X

Maalai Malar
www.maalaimalar.com