என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காயல்பட்டினத்தில் மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
- கவாஸ்கரும் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு ராணி என்ற மனைவியும், கவாஸ்கர் (31) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கவாஸ்கரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கவாஸ்கர் வீட்டிற்கு வரவில்லை. காலையில் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கவாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்