என் மலர்
உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
- வரதராஜனுக்கு இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த வரதராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை மணவிவிளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 33). தொழிலாளி. இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு இருந்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது. திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும் வயிற்றுவலி குணம் ஆகவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






