search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது

    • தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் ஏகாம்பரநாதன் . இவர் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சின்னகண்ணுபுரம் மீளவிட்டான் சாலையில் சென்ற போது 3 வாலிபர்கள் அவரை மறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் ஏகாம்பரநாதன் (வயது22). இவர் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சின்னகண்ணுபுரம் மீளவிட்டான் சாலையில் சென்ற போது 3 வாலிபர்கள் அவரை மறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி தூத்துக்குடியை சேர்ந்த மாதவன் (21), இன்பராஜ் (20) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×