search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கரும்புக்கடை சந்திப்பில்  குவியும் வடமாநில வாலிபர்கள்
    X

    கோவை கரும்புக்கடை சந்திப்பில் குவியும் வடமாநில வாலிபர்கள்

    • காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.
    • கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும்.

    குனியமுத்தூர்

    கோவை மாநகரில் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

    குறிப்பாக கோவையில் சுந்தராபுரம், கரும்புக்கடை, துடியலூர், கணபதி மோர் மார்க்கெட் பகுதிகளில் கூட்டமாக நின்று கொண்டிருப்பார்கள்.

    கோவை கரும்பு கடை ஜங்ஷனில் தினமும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9.30 மணி வரை காத்திருப்பார்கள்.

    கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும். அப்படிப்பட்ட இடத்தில் 300-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காலை நேரத்தில் நிற்கும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    காலை 8 மணி முதல் 9 மணி வரையில் கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி வாகனம் அதிகமாக இங்கு இயங்கி கொண்டிருக்கும். இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித் திரியும் போது வாகன நெரிசல் மேலும் கூடுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது:-

    சாதாரணமாக எப்போதுமே இப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த வாலிபர்கள் கூடி இருப்பது போக்குவரத்துக்கு மிகவும் தடையாக உள்ளது.

    குறிப்பாக இப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களில், 90 சதவீதம் வடமாநில வாலிபர்கள் நிற்கிறார்கள். வேலைக்கு அழைத்து ெசல்பவர்கள் அந்த இடத்தை மாற்றினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் மேம்பாலத்துக்கு அடியில் இடம் நிறைய உள்ளது. அப்பகுதியில் இந்த தொழிலாளர்களை நிறுத்தி னால், கொத்தனார்கள் மற்றும் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படும் பட்சத்தில், தேவைப்படுவோர் தினக்கூலி வேலை யாட்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது, போக்குவரத்துக்கு தடை இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கபீர் இடம் கேட்ட போது, கண்டிப்பாக இதற்கு முடிவு செய்வோம். அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி போக்குவரத்துக்கு இடையூறு நேராதவாறு ஏற்படுத்துவோம் என்றார்.

    Next Story
    ×