நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்

புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன
நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க குவியும் இளைஞர்கள்
Published on

 வடவள்ளி,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள குளங்கள் நிரம்பின.

நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. எனவே ஆறு வறண்டு காணப்பட்டது. இங்கு தற்போது வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நொய்யல் ஆற்றின் சித்திரைசாவடி தடுப்ப ணையில் தண்ணீர் பெரு க்கெடுத்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதனால் தொண்டாமுத்தூரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

எனவே தொண்டா முத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து நீரில் குளித்து மகிழ்கின்றனர்.

ஒரு சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். இதில் தற்போது பெரிய அளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன. எனவே பலரும் ஆர்வமிகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திருந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

தொண்டாமுத்தூரின் கிளை ஆறுகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com