search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் வெட்டிக் கொலையில்   கைதான 8 பேர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    வாலிபர் வெட்டிக் கொலையில் கைதான 8 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    • எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
    • எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை முரளி (வயது 20). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). இவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முரளியை சிலர் காரில் அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் சர மாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:&

    ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 28.02.2022 அன்று அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி முரளியை (தற்போது கொலை செய்யப்பட்டவர்) கைது செய்தனர். அவர் அந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முரளி, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தான் முரளி கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய ஓசூர் அந்திவாடி நாகராஜ் மகன் சரவணன் (31), ஒன்னுப்பள்ளி மாதேஷ் (28), கொரட்டகிரி ரகு (21), தொட்டபிளி முத்திரை நவீன்குமார் (21), திம்மசந்திரம் மதன்குமார் (25), குருப்பட்டி நவீன்குமார் (20), மிடிகிரிப்பள்ளி சுனில் (29), பரத் (27) ஆகிய 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கைதான சரவணன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முரளி முதல் குற்றவாளி ஆவார். அவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த முரளி, ஜாமீனில் வெளியே வந்த தகவல் அறிந்தேன்.எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். அதன்படி மது குடிக்க அவனை அழைப்பது போல அழைத்து வந்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான வர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×