search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு
    X

    கோப்பு படம்

    பெரியகுளத்தில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு

    • தனியார் நிறுவன ஊழியருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமாக இறந்துகிடந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அண்ணாநகர் நந்தவனத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகுராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது அத்தை மகள் மீனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரினி என்ற பெண் குழந்தை உள்ளது. அழகுராஜாவுக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று அழகுராஜா உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அழகுராஜாவின் தம்பி கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவிடம் விசாரித்த போது அழகுராஜாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. திடீரென இறந்து விட்டார் என கூறினார்.

    ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து அழகுராஜாவின் உடலை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×