

தேனி:
தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுதாகர் மகன் ஸ்ரீராம்(15). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலை வீரப்பஅய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார்மோதி படுகாயமடைந்தார்.
தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிவார்டு நர்சாரியிடம் விசாரித்து வருகின்றனர்.