search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
    X

    பலியான விக்னேஷ்

    நத்தம் அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

    • எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததால் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
    • டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குமரபட்டிபுதூரை சேர்ந்தவர் வேல்தியாகு (வயது 36). டிராக்டர் டிரைவர்.இவர் பாதசிறுகுடியில் இருந்து குமரபட்டிக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த விக்னேஷ் என்பவர் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்- இன்ஸ்பெக்டர் தங்கமுனிசாமி வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் வேல் தியாகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன விக்னேஷ்க்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர்.

    Next Story
    ×