பணத்தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து

கொடைக்கானல் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஒருவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டதுகொடைக்கானல் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை புதூைரச் சேர்ந்தவர் தனபாண்டி (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி (எ) ராமச்சந்திரன் (35) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனபாண்டியை குத்தினார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com