search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் அருகே ஓசிக்கு மதுதர மறுத்த விற்பனையாளருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
    X

    கோப்பு படம்

    வேடசந்தூர் அருகே ஓசிக்கு மதுதர மறுத்த விற்பனையாளருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது

    • விற்பனையாளர் மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த வாலிபர் விற்பனையாளரை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கூத்தாம்பட்டியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக முருகேசன் (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 2 பேர் வந்து மதுபானம் ஓசியாக தருமாறு கேட்டனர். அதற்கு முருகேசன் ஏற்கனவே வாங்கிய மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படி இருந்தாலும் கடையை விட்டு வெளியே வா, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி உள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க முருகேசன் கடையை விட்டு வெளியே வந்தபோது மறைந்திருந்த அவர்கள் 2 பேரும் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முருகேசனை கத்தியால் குத்தியது மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (34) என தெரியவரவே அவரை கைது செய்தனர்.

    மேலும் அருண்குமாரின் கூட்டாளியை தேடி வருகின்றனர். இந்த கடையில் இதுபோல விற்பனையாளரை ஓசி மதுபானம் கேட்டு தாக்குவது இது 4வது சம்பவமாகும்.

    Next Story
    ×